ராஜா ராணி 2 சீரியலில் இனி சந்தியாவாக களமிறங்கிய பிரபல நடிகை – அவரை பற்றிய தகவல்கள் இதோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இரண்டாவது முறையாக சந்தியா கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் தற்போது சந்தியாவாக களமிறங்கி இருக்கும் ஆஷா கவுடா பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஆஷா கவுடா:
சின்னத்திரையில் டாப் சீரியல்கள் வரிசையில் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சித்து நடித்து வருகிறார். மேலும் கதாநாயகியாக தொடக்கத்தில் நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். இந்நிலையில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக நடிகை ரியா சந்தியாவாக களமிறங்கினார். அவர் சந்தியா கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தி இருந்த நிலையில், தற்போது அவரும் சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்த நடிகை ஆஷா கவுடா களமிறங்கி இருக்கிறார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நடிகை ஆஷா கவுடா, ஜிம் ட்ரைனராக இருந்தவர். அதன் பின் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். மேலும் அவர் நந்தி வர்மன்’ என்னும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் அவர் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஜிம் ட்ரைனர் என்பதால் போலீஸ் அதிகாரியாக அவர் பொருத்தமாக இருந்தாலும் இரண்டாவது முறையாக சந்தியா கதாபாத்திரம் மாற்றப்படுவதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்.