தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை – பிப்.25 முதல் 27ம் தேதி வரை!
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மதுபான கடைகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுபான கடைகள்
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது.
அதிரடியாக உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – அதிருப்தியில் நகைப்பிரியர்கள்!
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து வேட்புமனுக்கள் பரிசீலினை மேற்கொண்ட பிறகு தற்போது இத்தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் இத்தேர்தலில் 100% வாக்காளர் பதிவு மேற்கொள்ளும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிப்ரவரி 27ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பாதுகாப்பு படையினரும், போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றி இருக்கும் அனைத்து மதுபான கடைகளுக்கும் வருகிற 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.