தமிழகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை மறுநாள் மகா சிவராத்திரி தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ள நிலையில், குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் . இருப்பினும் முக்கிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும். இந்த வகையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய தினங்களில் ஒன்று மகா சிவராத்திரி தினம். இந்த நாளன்று சிவனுக்குரிய விரதம் இருந்து, இரவு தூங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம் ஆகும்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – ஓரிரு நாட்களில் வெளியீடு!
இந்த மகா சிவராத்திரி தினம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படும். இந்த வருடம் மார்ச் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும். இந்த திருவிழாவில் அனைத்து பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக குமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
எனவே மார்ச் 1 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ந்து அன்றைய தினம் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். மேலும் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் விடப்படும் விடுமுறைக்கு பதிலாக 12ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.