ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இருந்து விலகும் மகாபா ஆனந்த் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வரிசையில் சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக்கும் ஒன்று. இந்நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த செட்டே கலகலப்பான காமெடி நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்பேற்பட்ட சிறந்த தொகுப்பாளர் பற்றிய ஒரு ஷாக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.
மா.கா.பா ஆனந்த் பற்றிய தகவல்:
சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் மா.கா.பா.ஆனந்த். இவர் தமிழில் பிரபலமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , அட்டி, பஞ்சுமிட்டாய், உட்பட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் வானவராயன் வல்லவராயன் படத்தில் ஹீரோவாகவும் நடித்து மாஸ் காட்டியவர். இவர் ஆரம்பத்தில் மீடியாவுக்கு வரும் முன் வால் போஸ்டர் ஒட்டும் தொழில் செய்தவர். இவ்வாறு வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து எழுத்தாளர் ஆக விருப்பப்பட்டு சென்னை வந்தவர்.
ராதிகாவிடம் உடம்பு சரியில்லாமல் நடிக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த எபிசோட்!
அதன் பிறகு முதலில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றினார். அங்கு வேலை பார்க்கும் போது ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்புல மப்புல பாடலுக்கு இவரது பணியும் முக்கிய பங்கு வகித்தது. அதன் பிறகு இவரின் திறமையால் விஜய் தொலைக்காட்சியில் காலடி பதித்தவர். மேலும் நீண்ட வருடங்களாக இத்தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி லட்ச கணக்கான ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு வாழ்க்கையில் கடினமாக உழைத்து பல பிரச்சனைகளும், போராட்டங்களும் கடந்து வளர்ந்துள்ளார்.
நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கும் ரசிகர்களை தாண்டி அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்காகவே விரும்பி பார்க்கின்றனர். அந்த வரிசையில் இப்போது டாப் லிஸ்டில் இருப்பது மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா காம்போ. டாம் அண்ட் ஜெர்ரி போல இருவரும் செய்யும் அட்டகாசங்கள் பார்வையாளர்களின் கண்ணே படும் அளவிற்கு இருக்கும். இந்நிலையில் அவர் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல இருப்பதால் தற்போது தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூசிக் மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் தற்காலிகமாக பிரேக் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.