முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு! பொது மக்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், குறிப்பிட்ட சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
ரயில் சேவைகள் ரத்து:
தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வடகிழக்கு மாநிலங்களுக்கு சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, கோவையில் இருந்து சில்சார் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12515) இன்று மற்றும் ஜூலை 10 ஆம் தேதி கோவை ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு கௌகாத்தி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கௌகாத்தி முதல் சில்சார் இடையேயான பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கௌகாத்தி வரை மட்டுமே ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், சில்சாரில் இருந்து கோவைக்கு செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12516) வரும் ஜூலை 5 மற்றும் ஜூலை 12 ஆகிய தேதிகளில் கௌகாத்தி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே சில்சாரில் இருந்து தான் கிளம்பும் ரயில் கனமழை காரணமாக கௌகாத்தியில் இருந்து கிளம்ப இருக்கிறது. மேலும், திருவனந்தபுரத்தில் இருந்து சில்சார் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12507) வரும் ஜூலை 5 மற்றும் 12 ஆம் தேதிகளில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு கௌகாத்தி ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.35,000/- || உடனே விரையுங்கள்!
அதாவது. கௌகாத்தி முதல் சில்சார் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சில்சாரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12508) வரும் ஜூலை 7 மற்றும் 14 ஆம் தேதிகளில் கௌகாத்தியில் இருந்து இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் ரயில் நிலையம் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரயில் பயணிகள் இந்த மாற்றத்தை கவனித்து பயணம் செய்யும்படி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.