தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் வரவுள்ள முக்கிய மாற்றம் – உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!

0
தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் வரவுள்ள முக்கிய மாற்றம் - உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!
தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் வரவுள்ள முக்கிய மாற்றம் - உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!
தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் வரவுள்ள முக்கிய மாற்றம் – உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பாடத்திட்டம் கடந்த மாதம் மாற்றம் செய்யபடவுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்தது. அதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டம்:

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு பிறகு பொறியியல் படிப்பதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். ஆண்டுதோறும் அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து பொறியியல் படித்து வருகின்றனர். மற்ற ஆண்டுகளை போலவே நடப்பு ஆண்டிலும் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2022 – 2023-ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

கிட்டத்தட்ட 20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்பத்திற்கு ஏற்றது போல புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொறியியல் கல்லூரியை தொடர்ந்து தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மண்டல மாநாடு விழாவில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொறியியல் பாடத்திட்டங்களை போல கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றபடும் என்று தெரிவித்துள்ளார்.

திருமண கோலத்தில் கோபி ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் இந்த வாரம்!

மேலும் தமிழகத்தில் தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் பொறியியல் பட்டதாரிகள் அவரவர் பகுதிகளில் சிறு மற்றும் குறு தொழில்களை தொடங்க வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தியுள்ளார். அவரை தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வரின் தனிச்செயலாளர் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்றது போல மாணவர்களை தயார்படுத்த வேண்டும் பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!