அக்.11 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு!

0
அக்.11 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு!
அக்.11 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு!
அக்.11 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு!

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாநகரத்தில் தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அக்டோபர் 11ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் திறப்பு

கொரோனா 2ம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நோய் தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்ட அம்மாநில அரசு பல்வேறு செயல்பாடுகளுக்கு மீண்டுமாக அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் புனே மாநகராட்சியில் அமைந்துள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இந்த அறிவிப்பு தொடர்பாக மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மற்றும் அதனை சார்ந்த கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அக்டோபர் 11ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படலாம். இந்த கல்வி நிறுவனங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற வாராந்திர கொரோனா ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது புனே மாநகராட்சியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் வருவதற்கு கடுமையான விதிகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்ற மறுஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை? புதிய சர்ச்சை!

இது தவிர புனே கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மாணவர்களும் எதிர்மறை RT-PCR அறிக்கையை கட்டாயமாக எடுத்து வர வேண்டும். இது தவிர கல்லூரி வளாகத்திற்குள், முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!