கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் LED டிவி பரிசு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுகிழமைகளில் பல இடங்களில் தடுப்பூசி போடும் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. நிலைமையை சரி செய்ய அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் பல தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாத இறுதியில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை? புதிய சர்ச்சை!

அதனால் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி சனி ஞாயிற்று கிழமைகளில், கோவில்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுகிழமைகளில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை முழுவதுமாக பள்ளிகள் திறப்பு – முக்கிய உத்தரவு!

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குறித்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சிலர் இன்னும் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால் மக்களுக்கு இன்னமும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் முக்கிய அம்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்காக இந்த அறிவிப்பை ஆட்சியர் அமர் குஷ்வா வெளியிட்டு உள்ளார். அதில் நாளை தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 டிவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!