தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை? புதிய சர்ச்சை!
கொரோனா 3ம் அலை பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வேலூரில் தடுப்பூசி செலுத்தாத பயணிகள் பேருந்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி:
கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா முட்டிகள் அலை மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொது மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
TN TRB முதுகலை ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்நிலையில் வேலுார் பஸ் ஸ்டாண்டில் தடுப்பூசி போடாத பயணிகளை பஸ்ஸில் இருந்து இறக்கி விடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில், வேலூரில் இருந்து அரக்கோணம், சென்னை, திருப்பத்தூர், குடியாத்தம், ஒசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், திருச்சி, விருத்தாச்சலம், புதுச்சேரி, ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, காளஸ்திரி ஆகிய பகுதிகளுக்கு 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பேருந்திலோ பயணிப்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என கூறப்பட்டிருந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து வேலூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் தலைமையில் வேலுார் பஸ் ஸ்டாண்டில் இன்று ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 120 பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை முழுவதுமாக பள்ளிகள் திறப்பு – முக்கிய உத்தரவு!
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 120 பயணிகள் பஸ்ஸில் இருந்து இன்று இறக்கி விடப்பட்டனர். இதில், பாதி பேர் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டு கொண்டனர் என கூறியுள்ளனர்.