பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!!

0
பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - பெற்றோர்கள் அச்சம்!!
பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - பெற்றோர்கள் அச்சம்!!
பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷாமில் உள்ள பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பள்ளி விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி விடுதிகளில் கொரோனா தொற்று:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் பல பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் மாதம் 8 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது ஷாமில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிசோட் தெஹ்ஸிலில் உள்ள டெகான் கிராமத்தில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 229 மாணவர்களுக்கும், 4 ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் பல்கலை திறப்பு மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி!!

இதுகுறித்து வாஷிம் ஆட்சியர் சண்முகராஜன் கூறுகையில், “பள்ளிகளில் கொரோனா பரவல் நிலைமையை பார்வையிட்டு அதற்கு ஏற்றாற்போல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மற்ற பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளில் தீவிரம் காட்டி வருகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!