காமராஜர் பல்கலை திறப்பு மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு – கொரோனா எதிரொலி!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் எதிரொலியாக மூடப்பட்ட பல்கலையில் மார்ச் 3 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு:
கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட கல்லூரிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதனால் காமராஜர் கல்லூரி பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. பின்னர் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த அறிவிப்பு மார்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி!!
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறுகையில், “தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி, கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை 14 நாட்கள் மூடப்பட்டு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். எனவே தற்போது இந்த அறிவிப்பை நடைமுறைபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்