கிராமப்புறங்களில் 8 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மஹாராஷ்டிரா அரசு உத்தரவு!
கொரோனா பாதிப்புகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் உள்ள உடற்கல்வி நிறுவனங்களை மீண்டுமாக திறப்பதாக மஹாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இந்த பள்ளிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் மீண்டும் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பேரலை காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்ட பள்ளிகள், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மீண்டுமாக மூடப்பட்டது. எனினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த கல்வியாண்டு ஜூன் 15 முதல் துவங்கி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகளை மீண்டுமாக திறக்க மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
ஆதார் கார்டில் எத்தனை முறை தகவல்களை அப்டேட் செய்ய முடியும்? முழு விபரம் இதோ!
அதன் படி கற்றல் இழப்பு, இணைய இணைப்பு இல்லாமை, கேமிங், பெண் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள், வீட்டு வன்முறை உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை திறக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள கிராமப்புறங்களில் மட்டும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் உடற்கல்வி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
எனினும் பள்ளிகளில் மாணவர்கள் வருகை என்பது கட்டாயமாக இருக்காது. மேலும் பள்ளி மாணவர்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட வகுப்புகளில் முக்கிய பாடங்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும். பள்ளிகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளின் படி, ஒரு இருக்கைக்கு ஒரு மாணவர் என்ற வீதத்திலும், ஒரு வகுப்பிற்கு 15 முதல் 20 மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தவிர ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.