பிக்பாஸில் இறுதி சுற்று வரை இவர் கண்டிப்பாக வர வேண்டும் – மனம் திறந்த Fat man ரவீந்தரின் மனைவி!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் தனக்கு அமுதவாணன் தான் மிகவும் பிடிக்கும் என Fat man ரவீந்தர் அவர்களின் மனைவி மகாலக்ஷ்மி, யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், அவர்களில் இருவர் வெளியேறி தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் முதல் வார தலைவராக ஜிபி முத்து இருந்த நிலையில், இரண்டாவது வாரம் குயின்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் முதல் வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று சாந்தி மாஸ்டர் வெளியேறி இருக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
தற்போது 19 போட்டியாளர்களும் நிகழ்ச்சியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்து போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். அவர்கள் சந்தோசமாக இருக்கும் நேரங்களில் விளையாடி மற்ற நேரங்களில் சண்டையிட்டு வருகின்றனர். தற்போது சண்டையை மேலும் அதிகம் ஆக்க பிக்பாஸ் பொம்மை டாஸ்க் ஒன்றை கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் தினமும் பிக்பாஸ் எபிசோட் குறித்து Fat man ரவீந்தர் பேட்டி கொடுத்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசியே சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அந்த வகையில் நேற்றைய எபிசோட் அவருடைய மனைவி உடன் சேர்ந்து review கொடுத்திருக்கிறார். அதில் பேசிய அவருடைய மனைவி மகாலக்ஷ்மி, எனக்கு இந்த சீசனில் அமுதவாணனை மிகவும் பிடித்து இருப்பதாகவும், அவர் போலியாக இல்லாமல் இருப்பதால் இறுதி போட்டி வரை செல்ல வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.