அமிர்தாவை எழில் காதலிக்கும் விஷயத்தை ஈஸ்வரியிடம் கூறும் மீனா – ‘மகா சங்கமம்’ ப்ரோமோ ரிலீஸ்!
இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மகா சம்பவம் நடைபெற இருக்கிறது. எழில் அம்ரிதாவை காதலித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை மீனா ஈஸ்வரியிடம் கூறும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் 5 லட்சம் செலவு செய்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால், இந்த சிகிச்சை முறை அனைவருக்கும் வெற்றியை கொடுக்காது. 5 லட்சத்தை ரெடி செய்யவே குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அதாவது தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி, வீடு கட்டும் பணியை பாதியிலேயே நிறுத்தி 5 லட்ச ரூபாயை ரெடி செய்தனர்.
நவீனின் அடுத்த சீரியலில் ஜோடியாக நடிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி? அவரே வெளியிட்ட பதிவு!
ஆனால் முல்லைக்கு இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை வெற்றியை கொடுக்கவில்லை. முல்லையின் வயிற்றில் கரு தங்கவில்லை. குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டோம் என முல்லையும் மன அழுத்தத்தில் இருக்கிறார். முல்லையை தேற்றி வெளியே கொண்டு வர வேண்டுமென குடும்பத்தில் உள்ள அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாக்கியாவிடம் இருந்து தனத்திற்கு ஒரு கால் வருகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது ராமமூர்த்தி தாத்தாவின் 75வது பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் நீங்கள் அனைவரும் குடும்பத்துடன் வரவேண்டும் என கூறுகிறார். பாக்கியாவின் வீட்டிற்கு சென்ற பிறகாவது முல்லை மனசு மாறுவார் என நினைத்து அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வர முடிவெடுக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் எழில் அம்ரிதாவை காதலித்துக் கொண்டிருக்கிறார். அம்ரிதா விதவை என்பதால் எப்படியும் குடும்பத்தினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்கிற விஷயத்தை மீனா அறிந்துகொண்டு ஈஸ்வரிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.