கல்விக்கட்டணம் கேட்டு தனியார் பள்ளிகள் கெடுபிடி – பெற்றோர்கள் வருத்தம்!!
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் செயல்படாத நிலையில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களை கல்விக்கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு முறையை பின்பற்றி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை பொறுத்த வகையில் இறுதி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஒரு முறை கூட நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை.
தமிழகத்தில் 2000 + காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு எப்போது ? – பட்டதாரிகள் தவிப்பு
அரசு உத்தரவு:
நடப்பு கல்வி ஆண்டின் பாதியிலேயே பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது. இதனால் தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நேரடி வகுப்புகளை பள்ளிகள் நடத்தியிருக்கும் நிலையில் 75% வரை கல்வி கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. ஆனால் நேரடி வகுப்புகளை நடத்தாத பள்ளிகள் கூட 75% கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்ய மாட்டோம் என்று எச்சரித்து வருகின்றனர்.
மீண்டும் புகார்கள்:
மதுரையில் இது போல் தனியார் பள்ளிகள் பெற்றோர்களை மிரட்டுவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத நிலையில் அந்த அதிகாரிகளின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Shall we (private school teachers) commit suicide along with family?