மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புகைப்படங்களை நீக்க கோரி வழக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி தீர்ப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
புகைப்படங்கள்:
உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி சிலர் கோயிலின் சிற்பங்கள், சுவாமி சிலைகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அனுமதியின்றி எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை நீக்க கோரி மதுரையை சேர்ந்த நபர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழக அரசு பேருந்துகளில் இப்படி ஒரு வசதியா? வலுக்கும் கோரிக்கை!
இந்த வழக்கு விசாரணையின் போது வெளிநாடுகளில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சின்னங்களை புகைப்படம் எடுத்து பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து வருகின்றனர். நாம் 2,000 ஆண்டுகள் பழமையான சின்னங்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருக்கின்றோம் என்று நீதிபதி கூறினார். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகைப்படம் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடவோ தடை இல்லை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.