ரூ.500 க்கு வழங்கப்படும் சிலிண்டர் – மாநில அரசின் அசத்தல் திட்டம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் பணவீக்க விகிதம் காரணமாக மக்கள் அவதிப்பட கூடாது என்ற நோக்கத்தில் முதல்வர் மிகவும் குறைவான விலையில் சிலிண்டரை வழங்கி வருகிறார்.
அசத்தல் திட்டம்:
ராஜஸ்தான் மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதல்வர் அசோக் கெலாட் அவர்கள் மக்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களையும் நடந்து முடிந்த சர்வதேச மைய விழாவில் அறிவித்துள்ளார். அதன்படி தற்போது பணவீக்கம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் மாநில அரசானது 10 திட்டங்களுக்காக மக்களை ஒன்றிணைக்கும் மெஹெங்காய் ரஹத் முகாம்கள் (பணவீக்க நிவாரண முகாம்கள்) அமைத்து வருகிறது.
காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!
இதில் தற்போது வரைக்கும் 1.43 கோடி குடும்பங்கள் இந்த முகாமில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1140க்கு விற்கப்பட்டு வரும் கேஸ் சிலிண்டர்கள் ராஜஸ்தான் அரசின் இந்திரா காந்தி கேஸ் சிலிண்டர் மானிய திட்டத்தின் படி ரூ.500க்கு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர ரூபாய் 25 லட்சம் அளவிற்கான இலவச மருத்துவம், ரூ 1000 ஓய்வூதியம் கால்நடைகளுக்கான காப்பீடு, உணவு பெட்டிகள் உத்தரவாத திட்டம், இந்திரா காந்தி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களையும், மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.
இத்துடன் முக்கியமாக மாதத்திற்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் முதல் 200 மின்சாரத்திற்கான அனைத்து கூடுதல் கட்டணங்களையும் மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Follow our Twitter Page for More Latest News Updates