தமிழில் எழுத, படிக்க தெரிந்தவருக்கு ரூ.58,600/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !

0
தமிழில் எழுத படிக்க தெரிந்தவருக்கு ரூ.58,600 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு
தமிழில் எழுத படிக்க தெரிந்தவருக்கு ரூ.58,600 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவருக்கு ரூ.58,600/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !

மதுரை அருள்மிகு மீனாட்சி சந்தரேசுவரர்‌ திருக்கோயிலில்‌ காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள இந்து மதத்தினைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 18.08.2022 ஆம்‌ தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மதுரை அருள்மிகு மீனாட்சி சந்தரேசுவரர்‌ திருக்கோயில்
பணியின் பெயர் தாளம்‌, வேதபாராயணம்‌ & தொழில்நுட்ப உதவியாளர்
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
திருக்கோயில்‌ காலிப்பணியிட விவரங்கள்:
  • தாளம்‌ – 01
  • வேதபாராயணம்‌ – 02
  • உபகோயில்‌ ஒதுவார்‌ – 01
  • உதவி பரிசாரகர்‌ – 04
  • உதவி யானைப்‌ பாகன் – 01
  • கருணை இலக்கக் காப்பாளர் – 01
  • கால்நடை பராமரிப்புத்‌ தொழிலாளர்‌ – 02
  • தொழில்நுட்ப உதவியாளர் – 01
  • ஜெனரேட்டர்‌ ஆப்ரேட்டர்‌ – 01
  • பிளம்பர் – 01
  • சமையல்காரர் – 01
  • உதவி சமையல்காரர் – 01
  • துப்புரவு – 01
    Exams Daily Mobile App Download
அரசு பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்‌ இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும்‌, இந்து மதத்தை பின்பற்றுபவராகவும்‌ தமிழ்நாட்டைச்‌ சார்ந்தவராகவும்‌ இருக்க வேண்டும்‌. விண்ணப்பதாரர்‌கள் 01.07.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும்‌ 35 வயது நிறைவடையாதவராகவும்‌ இருக்க வேண்டும்‌. கருணை இல்லக்‌ காப்பாளர்‌ பதவிக்கு பெண்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

கல்வி தகுதி:

தமிழில்‌ எழுதப்படிக்கத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌, மற்றும்‌ அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட யாதொரு
நிறுவனங்களால்‌ நடத்தப்படும்‌ இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில்‌ சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

சம்பள விவரங்கள்:
  • தாளம்‌ – ரூ.18500-58600
  • வேதபாராயணம்‌ – ரூ.15700-50,000
  • உபகோயில்‌ ஒதுவார்‌ – ரூ.12600-39900
  • உதவி பரிசாரகர்‌ – ரூ.10000-31500
  • உதவி யானைப்‌ பாகன் – ரூ.11600-36800
  • கருணை இலக்கக் காப்பாளர் – ரூ.15900-50400
  • கால்நடை பராமரிப்புத்‌ தொழிலாளர்‌ – ரூ.10,000-31500
  • தொழில்நுட்ப உதவியாளர் – ரூ.20600-65500
  • ஜெனரேட்டர்‌ ஆப்ரேட்டர்‌ – ரூ.16600-52400
  • பிளம்பர் – ரூ.18000-56900
  • சமையல்காரர் – ரூ.19200-11900
  • உதவி சமையல்காரர் – ரூ.11600-36800
  • துப்புரவு – ரூ.10000 – 31500

சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:
  • ஒரு விண்ணப்பத்தின்‌ விலை ரூ.100/-ஐ திருக்கோயில்‌ அலுவலகத்தில்‌ நேரில்‌ செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்‌. திருக்கோயில்‌ நிர்வாகத்தின்‌ மூலம்‌ வரிசை எண்‌ இட்டு வழங்கப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டால்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌.
  • ஒவ்வொரு பதவிக்கும்‌ தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்‌. இரண்டு அல்லது அதற்கு மேலான பதவிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில்‌ பூர்த்தி செய்திருந்தால்‌ அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  • இதர விபரங்கள்‌ மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில்‌ அலுவலக வேலைநாட்களில்‌ அலுவலக வேலை நேரத்தில்‌ நேரில் வந்து தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!