நாடு முழுவதும் பரவி வரும் லம்பி வைரஸ் தொற்று – 57000 கால்நடைகள் இறப்பு!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கால்நடைகளை குறிவைத்து வேகமாக பரவும் லம்பி வைரஸ் தொற்றால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸால் ராஜஸ்தான் மாநிலத்தில் 57000 கால்நடைகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லம்பி வைரஸ்:
கொரோனாவில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் அடுத்தடுத்து பல நோய்களும் வைரஸ் தொற்றுகளும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் கால்நடைகளை தாக்கும் லம்பி வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தானில் லம்பி வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன. இந்த வைரஸானது குறிப்பாக கால்நடைகளை தாக்கி வருகிறது.
மேலும் பல மாநிலங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் ராஜஸ்தானில் பாஜக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லம்பி வைரஸ் தொற்றால் இதுவரை 57000 கால்நடைகள் இறந்துள்ள நிலையில், இதுவரை 11 லட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கால்நடைகளை அதிகளவில் பாதித்து வருகிறது.
இனி “இந்த” செயலிகள் பயன்படுத்த அனுமதி இல்லை.. பிறப்பிக்கப்பட்ட அதிரடி முடிவு!
Exams Daily Mobile App Download
இந்த வைரஸ் தாக்கி இருந்த கால்நடைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க பசுக்களை வைத்து இருப்பவர்கள் தங்களது பசுக்களுக்கு கோட் பாக்ஸ் தடுப்பூசிகளை (Goat Pox Vaccine) செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் மாநில அரசுகளுக்கு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் லம்பி வைரஸ் தொற்று நோயை தேசிய பேரழிவு நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்