இனி “இந்த” செயலிகள் பயன்படுத்த அனுமதி இல்லை.. பிறப்பிக்கப்பட்ட அதிரடி முடிவு!

0
இனி
இனி "இந்த" செயலிகள் பயன்படுத்த அனுமதி இல்லை.. பிறப்பிக்கப்பட்ட அதிரடி முடிவு!
இனி “இந்த” செயலிகள் பயன்படுத்த அனுமதி இல்லை.. பிறப்பிக்கப்பட்ட அதிரடி முடிவு!

இந்தியாவில் பப்ஜி, டிக்டாக் போன்ற செயலிகளை தடை விதிக்கப்பட்டுள்ளதை போல் ஆப்கானிஸ்தானிலும் தடை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிப்பு:

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை தற்போது அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போன்களின் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ, அதை விட அதிகமாக மோசமான விளைவுகளும் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தவறான பாதைகளில் செல்லும் சம்பவங்களையும் செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. கடந்த வருடங்களில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக செயல்பாட்டில் இருந்து வந்த பப்ஜி, டிக்டாக் போன்ற செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

பப்ஜி விளையாட்டில் மிகவும் அதிகமான வன்முறைகள் இடம் பெறுவதாகவும், டிக்டாக் செயலி சமூக சீரழிவிற்கு காரணமாக அமையும் என்று கூறி இந்த தடை அறிவிக்கப்பட்டது. இதேபோல், தற்போது பப்ஜி, டிக்டாக் செயலிகளை ஆப்கானிஸ்தானில் பயன்படுத்த தடை விதிக்க தாலிபான்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் ஆப்கானில் தாலிபான்களின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நாளை (செப்.21) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – உங்க ஏரியா இதுல இருக்கா? செக் பண்ணுங்க!

Exams Daily Mobile App Download

மிகவும் மூர்கத்தமான தாலிபான்களின் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாத ஆப்கான் மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக புலம் பெயர்ந்து விட்டனர். இந்நிலையில், பப்ஜி, டிக்டாக் செயலிகளில் வன்முறை மற்றும் அடிதடி போன்றவற்றை தூண்டும் வகையில் உள்ளதால் அடுத்த 90 நாட்களில் இந்த செயலிகளை தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தாலிபான்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!