சாமானிய மக்களை பாதிக்கும் விலை உயர்வு – மார்ச் 1ம் தேதி முதல் இனி திண்டாட்டம் தான்!
நாட்டில் மார்ச் 1ம் தேதி முதல் பல விதிமுறைகளில் மாற்றங்கள் வர உள்ளது. அதன்படி ரெப்போ வட்டி உயர்வு, EMI உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு ஆகியவை சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது.
விலை உயர்வு
நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். அதன்படி ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர்த்தியுள்ளது. இதனால் பெரும்பாலான வங்கிகள் MCRL விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கான கடன் சுமை அதிகரிக்கும்.
இதோ உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு! சம்பளம்: ரூ.1,45,000/- || NO Exam!
இதனை தொடர்ந்து, எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இந்த மாதம் சிலிண்டரின் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லையென்பதால், மார்ச் மாதம் விலை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நீங்கள் பான் அட்டை வைத்திருப்பவர்களாக இருந்தால் உங்களின் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இதற்கான கால அவகாசம் வருகிற மார்ச் 31ம் தேதி முதல் முடிவடைய உள்ளது. அதனால் வருகிற மார்ச் மாதம் சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்த செலவுகளை கொடுக்கும் என கூறப்படுகிறது.