உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் பலனடையும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையிலான அறிவிப்பை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிலிண்டர் மானியம்:
2016 ஆம் ஆண்டு முதல் உஜ்வாலா சிலிண்டர் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் மூலை, முடுக்குகளில் உள்ள ஏழை மக்களும் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் எந்தவித முன் பணமும் இல்லாமல் சிலிண்டர் எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை இத்திட்டத்தின் மூலம் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரையிலும் ஒன்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 2023 அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு சிலிண்டர் மானியத்தை ரூபாய் 300 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், திட்டமானது 2025 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.