இந்தியாவில் LPG சிலிண்டர் மானியம் – மத்திய அரசு ஆலோசனை!
தொடர்ந்து அதிகரித்து வரும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பொதுமக்களுக்கு சமையல் சிலிண்டர் மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சமையல் சிலிண்டர் மானியம்:
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. விரைவில் சமையல் சிலிண்டர் விலை 1000 ரூபாயைத் தாண்டும் சூழல் தற்போது நிலவி வருகிறது. அதனால் சமையல் சிலிண்டருக்கு மானியம் வழங்குவது குறித்த ஆலோசனையில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 26, 30ம் தேதிகளில் விடுமுறை – கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய அறிவிப்பு!
இந்த விஷயத்தில் அரசிடம் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளதாகத் தெரிகிறது. ஒன்று , மானியம் இல்லாமலேயே சமையல் சிலிண்டர்களை வழங்குவது. மற்றொன்று, குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் மானியம் வழங்குவது. ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் அரசு தரப்பிலிருந்து வெளியாகவில்லை. ஆனால் தற்போதைய நிலையில், மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் சில விதிமுறைகளின்படியே சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சிலிண்டர் மானியம் வழங்கப்படும். அதேபோல, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கும் மானிய உதவி கிடைக்கும். கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கான சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டது. இப்போதுதான் சிலிண்டர் மானியம் வருகிறது. சிலிண்டர் மானியம் வழங்குவதால் அரசுக்கும் அதிகளவில் செலவாகிறது. 2021ஆம் ஆண்டில் மட்டும் சிலிண்டர் மானியத்துக்காக ரூ.3,559 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.