தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை – அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

0
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை - அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை - அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை – அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நவ.9 மற்றும் 10ம் தேதிகளில் கனமழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை:

தமிழகத்தில் கடந்த அக்.31ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. தற்போது வரை அநேக இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகம் மட்டுமல்ல அதனை ஒட்டியுள்ள புதுவையிலும் கடந்த ஒரு வாரமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் இன்று தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Gmail-ல் இப்படி ஒரு வசதியா? புதிய அப்டேட்டை களமிறக்க இருக்கும் Google நிறுவனம்!

Exams Daily Mobile App Download

மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!