தமிழகத்தில் பயணிகள் ரயில் ரத்து எதிரொலி – வருவாய் இழப்பு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான ரயில்களில் பயணிகள் வருகை இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே துறையில் வருவாய் இழப்பு :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டது. பயணிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு போக்குவரத்து சேவைகளை தடை செய்தது. மேலும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் நாடே பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பிறகு கொரோனா குறைய ஆரம்பித்த போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் மீண்டும் கொரோனா இராண்டாம் அலை வேகமெடுத்தது.
தமிழகத்தில் ஜூலை 4 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே!
தற்போது கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் தொற்று அச்சத்தால் பயணங்களை தவித்தனர். பயணிகளின் வருகை இல்லாததால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அரசு பணியாளர்களும், கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் ரயில்வே துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த ஊரடங்கால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தெற்கு ரயில்வே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தெற்கு ரயில்வே துறையில் 2019-20 ம் நிதியாண்டில் 3,202 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் நடப்பாண்டு 1,407 வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் 20216 முதல் 2020 ஆண்டுகளில் சென்னை மண்டலத்தில் ரயில்களில் 50 கோடி மக்கள் பயணம் செய்தனர். ஆனால் இந்த ஆண்டில் 7.6 கோடி குறைந்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வருவாய் இழப்பால் பராமரிப்பு பணிகள் தாமதமாகும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.