தமிழகத்தில் ஜூலை 4 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே!

0
தமிழகத்தில் ஜூலை 4 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே!
தமிழகத்தில் ஜூலை 4 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே!
தமிழகத்தில் ஜூலை 4 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் சென்னையில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் ஜூலை 4 முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் இயக்கம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால் கொரோனா பரவல் அடிப்படையில் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து, துணி கடைகள், நகைக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 5 முதல் இரவு, வார இறுதி முழு ஊரடங்கு அமல் – புதிய தளர்வுகள் அறிவிப்பு!

மேலும் அனைத்து தனியார், அரசு நிறுவனங்கள் 100 சதவிகித ஊழியர்களுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வேலைக்கு செல்ல மக்கள் மின்சார ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஞாயிற்றுகிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் ஜூலை 4 முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை – அரக்கோணம் இடையே வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஜூலை 4 முதல் அனைத்து ஞாயிற்றுகிழமைகளில் மொத்தமாக 447 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!