நாட்டில் அதிகரித்து காய்ச்சலால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளா? வெளியான ஷாக்கிங் நியூஸ்!
நாட்டில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது பெரும்பாலான மாகாணங்களில் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகள் முழுவதிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சீனாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும், உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் அச்சுறுத்தலில் இருந்து வருகின்றனர்.
தமிழக ரேஷன் ஊழியர்களுக்கான குடும்ப நிவாரணம் – மார்ச் 15ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவு!
இந்த நிலையில், சீனாவில் பெரும்பாலான மாகாணங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக சீயான் மற்றும் ஷாங்கி நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.