தமிழக ரேஷன் ஊழியர்களுக்கான குடும்ப நிவாரணம் – மார்ச் 15ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவு!

0
தமிழக ரேஷன் ஊழியர்களுக்கான குடும்ப நிவாரணம் - மார்ச் 15ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவு!
தமிழக ரேஷன் ஊழியர்களுக்கான குடும்ப நிவாரணம் – மார்ச் 15ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் வாரிசுதாரருக்கு நிவாரணம் வழங்க ஒவ்வொரு மண்டலத்தில் இருக்கும் ஊழியர்களின் விவரங்களை அனுப்புமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்தது. தற்போது இதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடும்ப நிவாரணம்

தமிழகத்தில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல் – Just இன்னொரு தேர்வு தான்!

மேலும் கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் வாரிசுதாரருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்தது. அத்துடன் ஒவ்வொரு மண்டலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் விவரங்களை அனுப்புமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.

ஆனால் இந்த விவரங்களை அனுப்புவதில் கால தாமதம் ஏற்படுவதால், தற்போது மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கியுள்ளது. அதாவது, கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் விவரங்களை வருகிற மார்ச் 15ம் தேதிக்குள் மண்டல இணை பதிவாளர்கள் அனுப்ப வேண்டும் என்றும் இது போன்று கால அவகாசம் இனிமேல் வழங்கப்படாது என்றும் கூட்டுறவுத்துறை கண்டித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!