தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல் – Just இன்னொரு தேர்வு தான்!
தமிழகத்தில் நாளை முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வை பயமின்றி அணுக வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், இதே போல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் எழுத இருக்கின்றனர். இதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு (மார்ச் 13) நாளை முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. அத்துடன் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (மார்ச் 14) முதல் பொதுத்தேர்வு தொடங்கி வருகிற ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
JEE Main 2023 Session 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.12) கடைசி நாள் – Apply Now!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தமிழக முதல்வர் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றின் மூலம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதில் இவர் கூறியதாவது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித பயமின்றி, தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் தேர்வை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மாணவர்கள் தங்களின் பாடங்களை ஆழ்ந்து புரிந்து படித்து, விடைகளை தெளிவாக முழுமையாக எழுதினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் பொதுத்தேர்வை Just இன்னொரு தேர்வு என எண்ணி பயமின்றி எழுதுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுமட்டுமன்றி, முதல்வராக இல்லாமல் தங்களின் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராக வாழ்த்தி அனைவரின் வெற்றிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.