தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் 23, 25ம் தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற 23, 25ம் தேதிகளில் இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருக்குவளையில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!
இந்த அறிவிப்பில், முதலாவதாக, நாளை மறுநாள் (மார்ச் 23) வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதே போல், வருகிற 25ம் தேதி அன்று திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த முகாமில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். அத்துடன் இம்முகாமிற்கு வருகை புரிபவர்கள் தங்களின் ஆதார் அட்டை நகல், சுய விவரக்குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும். மேலும் கொரோனா மற்றும் இன்புளூன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.