தமிழகத்தின் இம்மாவட்டத்தில் (நாளை) ஜூன் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் (நாளை) ஜூன் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் (நாளை) ஜூன் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் (நாளை) ஜூன் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ராமநாதபுரம் ஏர்வாடி சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் அவசர அலுவல் பணிகள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த திருத்தல திருவிழாக்கள் போன்றவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்பர்.

Exams Daily Mobile App Download

கடந்த ஜூன் 1ம் தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து ஜூன் 11ம் தேதி கொடியேற்றப்பட்டது. 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 24ம் தேதி இன்று கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமையான நாளை (ஜூன் 24) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு , 38 பேர் பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

இந்த விடுமுறை நாளில் கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 02.07.2022 அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி தர்கா நிகழ்ச்சி 30ம் தேதி கொடியிறக்கத்துடன் பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடையும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!