இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு , 38 பேர் பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

0
இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு , 38 பேர் பலி - அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு , 38 பேர் பலி - அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் தீவிரமடையும் தினசரி கொரோனா பாதிப்பு , 38 பேர் பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் , நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு:

கடந்த 2 வருடங்களாக உலக மக்களையே கொரோனா தொற்று உலுக்கி வந்தது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், இவை உருமாற்றம் அடைந்து மீண்டும் பரவி வருகிறது. கொரோனாவின் பிறப்பிடம் சீனாவின் வணிக நகரமான வுஹான் ஆகும். வுகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா, அதிக பேரழிவை ஏற்படுத்தியது. இருப்பினும் ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வந்ததால் அந்த தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனால் சீன அரசு மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்து உள்ளது. இந்நிலையில் இந்த தொற்று இந்தியாவிலும் தலை தூக்கி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • புதிதாக 13,313 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,34,958 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 38 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,941 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,972 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,36,027 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.60% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!

  • சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.19% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 83,990 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் 1,96,62,11,973 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,91,941 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!