தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் 1ம் தேதி அன்று மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம் நடக்க உள்ளது. இதனால் அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவு வழங்கும். அப்படி, மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த விடுமுறை நாட்களின் அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை விடுமுறை அளிக்கப்படும். இதற்காக மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் வழக்கமாக நடைபெறும். நடப்பு ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 1ம் தேதி அன்று நடக்க உள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
உக்ரைனின் தலைநகரை நெருங்கும் ரஷ்ய படைகள், ஊரடங்கை அறிவித்த அரசு – அதிபர் தலைமறைவு!
அந்த அறிக்கையில், மார்ச் 1ம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும் என்றும், மார்ச் 1ம் தேதி அன்று விடுமுறைக்கு பதிலாக மார்ச் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான 12-ந் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.