தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான திருக்கோவிலான நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருவிழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதன் முக்கிய அம்சமாக தேரோட்டம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டு உள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் பாரம்பரியம் உடையது. அந்த கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் மிகவும் பிரபலமானது. அந்த திருவிழாக்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருவிழா ஆண்டுதோறும் விமர்சியாக கொண்டாடப்படும். அதற்கான முக்கிய அம்சமாக ஆனித்தேரோட்டம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஜூலை 11 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 18ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் தகவல்!
மேற்கண்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தேர்வுகள் உள்ளூர் விடுமுறை நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் எந்த மாறுதலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.