கன்னியாகுமரி மாவட்டத்தில் டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புனித கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க திருத்தலங்கள் அமைந்துள்ளது. இத்திருத்தலங்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய திருவிழாக்கள் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாகளை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் (டிச.03) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் 2023 ஜனவரி 28ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
Exams Daily Mobile App Download
இந்த பேராலயம் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு மக்கள் சாதி மத வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபாடு செய்வர். தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் 10 நாள் தேர் பவனி நடைபெறும்.