தமிழகத்தில் வரும் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நீலகிரி மாவட்டத்தில், 124 வது மலர் கண்காட்சி 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் தாவரவியல் பூங்காவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்சியர் உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பரவல், கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து படிப்படியாக குறைந்து வருவதால் மார்ச் 31 உடன் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இந்நிலையில் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம் ஆகும். இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கோடை காலமான மே மாதம் தொடங்கி விட்டதால், நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா பொலிவு படுத்தப்படும். இந்த 124 வது மலர் கண்காட்சி , ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 20ந்தேதி தொடங்கி 24ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இதை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். இந்நிலையில், பூங்காவில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இம்முறை பிரமாண்ட மேடை, அரங்குகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் அரசின் அவசர பணிகளில் எந்த இடையூறு ஏற்படாமல் இருக்க மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் உள்பட முக்கிய அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 20-ந் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் வருகின்ற ஜூன் 4-ந் தேதி பணி நாளாக இயங்கும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.