தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எந்தெந்த வகுப்புக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கமான தேர்வு நடைமுறைகளில் மாற்றம் எழுந்துள்ளது. அதன் படி எந்தந்த வகுப்புக்கு எத்தனை நாள் விடுமுறை எந்த தேதி வரை தேர்வு நடைபெறும் என்பது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. அதனால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்கப்பட்டது.
ஆலியா மானசா 2வது குழந்தை பிறப்புக்கு பிறகு செய்த காரியம் – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு தேதியையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன் படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 மாதம் ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு பின் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த கல்வியாண்டுக்கான அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும், ஆனால், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.