தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த நிலையில் நீங்கள் நல்ல லாபம் தரும் சேமிப்பு திட்டத்தில் இணைந்தால் வாழும்போதே நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் தற்போது ஒரு சூப்பரான சேமிப்பு திட்டம் குறித்து பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்
பொதுமக்கள் அனைவரும் வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து தற்போது LIC நிறுவனமும் நல்ல லாபம் தரும் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது LICயின் ஜீவன் உமாங் திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என விரிவாக பார்ப்போம்.
தமிழகத்தில் 98 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!
ஜீவன் உமாங் திட்டத்தில் 90 நாட்கள் முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கணக்கை தொடங்கலாம். மேலும் இதில் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் என உங்களுக்கு உகந்த காலத்தை தேர்வு செய்து பிரீமியம் தொகையை செலுத்தலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சமும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். இதன் முதிர்வு காலத்தின் முடிவில் நீங்கள் ஆண்டுதோறும் வருமானம் பெறலாம் அல்லது முதிர்வு காலத்தின் முடிவில் மொத்த பணமாகவும் பெறலாம்.
மேலும் பிரீமிய காலத்திற்கு பிறகு ஆண்டுதோறும் மொத்த திட்ட முதலீட்டில் இருந்து உங்களுக்கு 8% வரை பலன்கள் கிடைக்கிறது. அதாவது 26 வயதில் நீங்கள் பாலிசியை தொடங்கினால் உங்களது பாலிசி 4.5 லட்சம் ரூபாய் என நீங்கள் தேர்வு செய்தால் 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் முதிர்வு காலம் முடியும் போது 8% கிடைக்கும் என்பதால் உங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36000 வரை பணம் கிடைக்கும்.