LIC நிறுவன பங்குகளின் அதிரடி சரிவு – சமாளிக்க அரசின் புதிய திட்டம்!
LIC நிறுவனம் இந்திய நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் அதிரடியாக சரிவதை தொடர்ந்து அரசு புதிதாக திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
LIC நிறுவனம்:
Life Insurance Corporation, இந்தியாவில் 13 லட்சம் ஏஜெண்டுகளை கொண்ட பலதரப்பட்ட காப்பீடுகளையும் மக்களுக்கு அளித்து வரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு உலகின் பல நாடுகளிலும் அலுவலக கிளைகள் உள்ளது. மேலும் LIC நிறுவனத்திற்கு மொத்தமாக 41 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் மற்றும் முதலீடுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் திடீரென்று LIC நிறுவன ஐபிஓ பங்குகள் ரூ.949 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
Exams Daily Mobile App Download
அப்போது முதல் LIC நிறுவனத்தின் பங்குகளின் விலையானது 30% வரை சரிந்து உள்ளது. இதுவரை LIC நிறுவனத்திற்கு என்று தனியாக தலைமை நிர்வாகி யாரும் நியமிக்கப்பட்டதில்லை. ஆனால் தற்போது நிறுவனத்தின் பங்குகளை உயர்த்தும் நோக்கத்திற்காகவும், சிறப்பான செயல்பாட்டிற்காகவும் தனியார் நிறுவன CEO ஒருவரை LICக்கு நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.