தமிழகத்தில் டிச.09 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனம் பங்கேற்பு! இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (டிச.09) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் ஏராளமானோர் புதிய வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். குறிப்பாக அண்மையில் கல்லூரி முடித்த மாணவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் தனியார் துறைகள் அவ்வபோது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நாளை (டிச.09) திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மையம், டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனம் ஆகிவை இணைந்து இந்த முகாமை நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
LIC நிறுவன பங்குகளின் அதிரடி சரிவு – சமாளிக்க அரசின் புதிய திட்டம்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இவர்கள் 2019 முதல் 2022 ஆம் ஆண்டுக்குள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனம் மூலமாக 21 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பின்னர் இவர்கள் ICICI வங்கியில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் டிச.09 ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது கல்வி சான்றிதழ், அடையாள சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.