தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பணி நிரந்தரம்:
தமிழகத்திற்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனை வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
கடந்த 10 ஆண்டுகளாக ரூ.10,000 மட்டுமே தொகுப்பூதியமாக பெற்று வருகிறோம். இதனை கருத்தில் கொண்டு அரசு தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் தான் பகுதி நேர ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு கனமழை அபாயம் – மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்! அமைச்சர் உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். அரசு இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 177-வது அரசாணையின் படி ஒரு பகுதி நேர ஆசிரியர் மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணை நடைமுறைக்கு வரவில்லை. அவ்வாறு நடைமுறைக்கு வந்திருந்தால் பகுதி நேர ஆசிரியர் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரிந்து சுமார் 30,000 வரை ஊதியம் பெற்றிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். வருங்கால சிற்பிகளை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.