தமிழகத்திற்கு கனமழை அபாயம் – மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்! அமைச்சர் உத்தரவு!

0
தமிழகத்திற்கு கனமழை அபாயம் - மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்! அமைச்சர் உத்தரவு!
தமிழகத்திற்கு கனமழை அபாயம் - மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்! அமைச்சர் உத்தரவு!
தமிழகத்திற்கு கனமழை அபாயம் – மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்! அமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மருத்துவ முகாம்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம்:

தமிழகத்தில் புயலின் காரணமாக சென்னை,திருவள்ளூர்,கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காலங்களில் எப்போதும் பருவ காய்ச்சல்கள் அதிகமாக பரவும். இதனை கருத்தில் கொண்டு மக்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

மத்திய அரசு பணிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 2.46 லட்சம் பேர் நியமனம் – மத்திய அமைச்சர் தகவல்!

Exams Daily Mobile App Download

சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் பட்ட மேற்படிப்புக்கான தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் அளவு அதிகரிக்கும் போது உடனடியாக அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!