பிப்.14ம் தேதி அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலை முன்னிட்டு 14ம் தேதி அன்று கோவா மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொது விடுமுறை:
இந்தியாவில் கோவா சட்டப்பேரவைக்கு வரும் 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வகையில் பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. கோவா மாநிலத்தில் தேர்தல் அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டமன்றத்துக்கு வரும் 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
அடுத்த 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஹிஜாப் எதிர்ப்பு விவகாரம்!
இதற்காக பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் முழு ஆர்வமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவாவில் தேர்தல் விதிமுறைகள் அமலாக்கப்பட்டு பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் கடுமையாக கண்காணிப்பு நடத்தி வருகின்றனர். மேலும் கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகள் முழுமையாக பதிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் நாள் அன்று கோவா மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஞ்சி கோப்பையில் விளையாடும் இந்திய நட்சத்திரம் சேதேஷ்வர் புஜாரா – ரசிகர்கள் உற்சாகம்!
இதனிடையே கோவா மாநிலத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வெளியிடுகிறார். மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியும், கடைசி மற்றும் 7 வது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.