தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 14 கோடை விடுமுறை தொடக்கம்
தமிழகத்தில், 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நாளை நிறைவடைகிறது. எனவே நாளை மறுநாள் முதல், கோடை விடுமுறை தொடங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை தொடக்கம்:
உலகையே கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இன்று வரை கொரோனாவுடன் போராடி கொண்டுதான் இருக்கிறோம். 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, வுகான் நகரில் அதிக பேரழிவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா, ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பரவி நாடுகளில் பரவி உச்சம் தொடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து தற்போது வரை கொரோனா பல்வேறு பெயர்களில் உருமாற்றம் அடைந்து மனிதர்களிடையே பரவி பெரும் நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்!
கொரோனா இரண்டாவது அலை உலக நாடுகளை உலுக்கி பார்த்தது. இதனிடையே டெல்டா அலையில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்த நிலையில், ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவை விட மிக அதிக அளவில் பரவும் தன்மை கொண்டதாக இருந்தது.கொரோனா காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் தான் வகுப்புகள் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் குறைக்கப்பட்ட பாட திட்டத்தின் படி பாடங்கள் நடத்தப்பட்டன.
கொரோனாவால் விடப்பட்ட அதிக விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இந்த ஆண்டு மே மாதம் வரை பள்ளி வேலை நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் வழக்கமாக முடிய வேண்டிய ஆண்டு இறுதி தேர்வுகள் ஒரு மாதம் தாமதமாகவே நிறைவடைய உள்ளன. இதற்கிடையில் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயில் காரணமாக,1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தேர்வு நாளில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ல் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி, நாளையுடன் முடிகின்றன. அந்த வகையில், நாளை மறுநாள் 14ம் தேதி முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோடை விடுமுறை நாட்களில், பள்ளிகள் செயல்படாது, விடுமுறை நாட்களில் விருப்பப்படும் மாணவர்களுக்கு மட்டும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இடங்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.