1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்!
நாடு முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் மத்திய அரசு அனைத்து பள்ளிகளும் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்:
வழக்கமாக நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும். இதனால் அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் பள்ளிகள் கல்வியாண்டை ஏப்ரல் மாதத்தில் முடித்து மாணவர்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் மாதங்களில் கோடை விடுமுறை அளிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் அனைத்தும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மிகவும் தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு, தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி மாதந்தோறும் குறைகேட்பு!
ஆனால் வழக்கத்தை விட நடப்பாண்டில் கோடை வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. மிகவும் கடுமையான வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கும் சூழல் உள்ளது. இதனால் மத்திய அரசு அனைத்து பள்ளிகளும் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும், பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணிக்கு பள்ளியை தொடங்கி மதியத்திற்குள் நிறைவடையுமாறு பள்ளிகளின் நேரத்தை மாற்றலாம். பள்ளி வாகனங்களில் உள்ள இருக்கையின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே மாணவர்களை ஏற்ற வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும், வாகனங்களில் குடிநீர், முதலுதவி பெட்டி போன்றவை இருக்க வேண்டும். பள்ளிகளில் இருக்கும் அனைத்து மின் விசிறிகளும் முறையாக செயல்பட வேண்டும் என்றும், அனைத்து வகுப்பறைகளும் நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் எளிய, தளர்வான, பருத்தியினாலான ஆடைகளை அணியலாம் என்றும் சீருடையுடன் உள்ள கழுத்தில் அணியக்கூடிய டை அணிவதில் தளர்வுகள் அளிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.