ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!
டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 முதல் 15 வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களுக்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வகுப்பு வாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர் ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கையால் தொற்று பரவல் குறைய தொடங்கியது. இதனால் மாவட்டங்களில் உள்ள நிலவரத்தை பொறுத்து பள்ளிகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் படி தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – விண்ணப்பிக்க டிச.30 கடைசி நாள்..!
இந்நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் 6 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 18 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என்ற கலப்பின முறையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் உள் மதிப்பீட்டில் கணக்கிடப்படும் பணிகள் மற்றும் செயல்பாடுகளை பராமரிக்க பள்ளிகளை கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளின் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை குறித்துக் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் தனிக்கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இல்லை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் டெல்லி அரசு பள்ளிகளின் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 1 முதல் 15, 2022 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த காலகட்டத்தில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் எதுவும் நடத்தப்பட முடியாது. மேலும் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் கற்றலை ஒருங்கிணைக்க உதவும் வகையில் இதுவரை உள்ளடக்கப்பட்ட 2021-22 கல்வி அமர்வுக்கான பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.