தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இல்லை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இல்லை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இல்லை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இல்லை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடியில் யாருக்கெல்லாம் கிடையாது என்ற பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காண்போம்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்கள் குறைவான வட்டியில் பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் வசதிகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு நகை பெற்றவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் தெரிய வந்தது. இது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு மாவட்டம் தோறும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் குறித்த ஆய்வு பணி நடைபெற்றது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு அட்டவணை!

அதில் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் போலி நகைகள் வைத்து நகைக்கடன் பெற்றவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கடனை தள்ளுபடி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்று விட்டன. அடகு வைத்த நகைகளை திரும்ப கொடுப்பதற்கு பட்டியல் தயாராகி விட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் பொங்கலுக்கு முன்பான அரசு விழாவில் தகுதியான 25 சதவிகிதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆய்வின்படி புதிய பட்டியலையும், நிபந்தனைகளையும் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. அதில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்பதை பார்ப்போம்.

  • நகைக்கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
  • 2021ம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
  • கூட்டுறவு வங்கியில் பெற்ற நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி கிடையாது.
  • 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் இருந்தாலும் கூட அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
  • அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது. மேலும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
  • ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!