தமிழகத்தில் மே 5ம் தேதி கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிக்கை!
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் மே 5 ஆம் தேதி விடுமுறை வழங்க இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் அறிக்கை விடுத்து உள்ளார். இது குறித்த முழு விவரத்தையும் இப்பதிவில் பார்ப்போம்.
கடைகளுக்கு விடுமுறை:
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். இந்த கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
HCL Tech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தற்போது கொரோனா முடிந்து பலரும் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5 ஆம் தேதி திருச்சி சமயபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முழு வேலைப்பாடுகளையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்து வருகிறார். மேலும் தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
Exams Daily Mobile App Download
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழக வணிகர்களின் துயரை துடைத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றிடும் வகையில் மாபெரும் மாநாட்டினை வணிகர் தினமான மே 5ந் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை தொடர்ந்து, வருகின்ற மே 5ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளித்து விட்டதாகவும், மேலும் அந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திருச்சியில் பங்கு பெற இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.