TNPSC தேர்வர்களுக்கு முக்கிய செய்தி.. அரசு பணிக்கு இனி ‘இது’ கட்டாயம் – சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்!
தமிழக அரசு பணிக்கு தமிழ் மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற பழைய சட்டத்தில் தற்போது புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சட்ட திருத்தம்:
தமிழகத்தில் அரசுப்பணிகளில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் பணியாற்றுவது குறித்து அரசுக்கு அதிக அளவில் புகார்கள் எழுந்தது. மற்ற மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமிழக மக்களிடம் சரளமாக அவர்களின் மொழியில் பேசி அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விளங்க வைப்பதில் பல குறைபாடுகள் இருப்பது மக்களிடம் அதிருப்தியையும், தமிழர்களின் வேலைவாய்ப்பில் மற்ற மாநிலத்தவர்கள் அதிக இடம் பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதமாக இருந்தது.
2023 பட்ஜெட் : PPF வரம்பு உயர்வு – வைப்பு நிதி பயனர்களுக்கு ‘இந்த’ பலன் கிடைக்குமா?
Follow our Instagram for more Latest Updates
இதனால், தமிழக அரசு பணிகளில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் பணிவாய்ப்பை பெற முடியும் என்று, TNPSC தேர்வுகளில் தமிழ் மொழியை அரசு கட்டாயமாக்கி 2021ம் ஆண்டு சட்ட மோசோதாவை தாக்கல் செய்தது. தற்போது நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தமிழில் தேவையான அளவு புலமை பெறாதவர்கள் அரசு பணியில் இருந்தாலும், பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழில் தேர்ச்சி பெற விட்டால் இனி அரசு பணி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.