தமிழகத்தில் ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் உறுதி!!

0
தமிழகத்தில் ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி!!
தமிழகத்தில் ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி!!
தமிழகத்தில் ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் உறுதி!!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.

வர்த்தக மையம்

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆண்டு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களை முடிவு செய்து அறிவிப்பார். அதன்படி இன்றுடன் இத்துடன் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறைகள் மீதான கேள்விகள் எழுப்பட்டது.

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய செய்தி.. அரசு பணிக்கு இனி ‘இது’ கட்டாயம் – சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி கேள்வி நேரம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர். அந்த வகையில் தொழிற்துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது, தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

அத்துடன் அரசு மேற்கொண்ட ஆய்வின்படி, புதிய தொழிற்சாலைகளில் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். இதன் மூலமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!